சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.இந்த நிலையில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் 21ம் தேதி வினியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கியது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ மோகன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.