கிண்டியில் அதிமுக பிரமுகருக்கு வெட்டு

சென்னை: சென்னை கிண்டி லேபர் காலனியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(32). இவர் சைதை பகுதி அதிமுக இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தல் பணியின்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக தெண்டர்கள் எழில்செல்வம்(20), குணா(20) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெய்கணேஷ் தனது வீட்டின் அருகே நின்றிருந்த போது அங்கு வந்த குணா, எழில் ஆகியோர் மீண்டும் தகராறு செய்துள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில், இருவரும் ஜெய்கணேசை கத்தியால் குத்த முயன்றனர். அதை தடுக்க முயன்ற போது, ஜெய்கணேசுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் வழிந்த நிலையில் அலறித்துடித்தார். இதையடுத்து எழில், குணா இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். காயமடைந்த ஜெய்கணேசை அப்பகுதிவாசிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: