ஆவடி: சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆவடி, கோவர்தனகிரி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (25), இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பயணியாற்றி வருகிறார். இவருக்கு கலைசெல்வி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். பாலசந்திரன் வீட்டின் எதிரில் பெண் ஒருவர் இரண்டு மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். அவருக்கு கணவர் இல்லை. இதைப் பயன்படுத்தி பாலசந்திரன் அடிக்கடி எதிர் வீட்டுக்கு சென்று நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமியுடன் பாலசந்திரன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதுபற்றி தெரிந்த சிறுமியின் தாயார் பாலச்சந்திரனை ஒருமுறை கண்டித்துள்ளார். இதையடுத்து, பாலசந்திரன் அவரகள் வீட்டுக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து விட்டு வெளியில் தனியாக சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி சிறுமியின் தாயார் சொந்த ஊரான மதுரைக்கு ஓட்டு போடுவதற்காக சென்றுவிட்டார்.