திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மினி ேவனில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர். திருவொற்றியூர் பேசின் சாலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 9 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.சுமார் 300 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.