பெரம்பூர்: கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாராயண பாபு. இவரது மகன் பிரவீன் (15), பைக் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவரும், பிரவீனும் பணத்தை பந்தயமாக வைத்து கிரிக்ெகட் விளையாடினர். இதில் பிரவீன் வெற்றி பெற்றதால் பந்தய பணத்தை கேட்டுள்ளான். ஆனால், பணம் தரமுடியாது என்று கூறி ஜெகதீஷ் தகராறில் ஈடுபட்டார். பின்னர், கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் பீரவீனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஜெகதீஷை தேடி வருகின்றனர்.