பிரிஸ்பேன்: பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் உலக பிரிவு பைனலில் விளையாட, ஆஸ்திரேலிய அணி 26 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது. பிரிஸ்பேன், பேட்ரிக் ரேப்டர் அரங்கில் நடந்த அரை இறுதியில் பெலாரஸ் அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. ஒற்றையர் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி 2 வெற்றிகளையும், பெலாரஸ் வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா, அரினா சபலென்கா தலா ஒரு வெற்றியையும் பெற்றதால் 2-2 என சமநிலை நிலவியது. இதைத் தொடர்ந்து, கடைசியாக நடந்த பரபரப்பான இரட்டையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி - சமந்தா ஸ்டோசர் ஜோடி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா - அரினா சபலென்கா ஜோடியை வீழ்த்தியதை அடுத்து ஆஸி. அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி பைனலுக்கு முன்னேறியது.