புதுடெல்லி: ஜன்தன் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை விரைவில் ஒரு கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற இலக்குடன், 2014 ஆகஸ்ட் 28ம் தேதி ஜன்தன் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 35.39 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதிப்படி இந்த கணக்குகளில் மொத்தம் ரூ.95,382.14 கோடி உள்ளது. இந்த மாதம் 3ம் தேதி புள்ளி விவரப்படி இதில் ரூ.97,665.66 கோடி இருப்பு உள்ளது. ஜன்தன் கணக்கில் கணக்கு துவக்கியவர்களில் ரூ. 27.89 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.