கிங்ஸ் லெவனை வென்றது டெல்லி

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வென்றது. டெல்லியில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் துவக்க வீரர் கேல் அதிரடியாக ஆடினார். இவர் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 37 பந்தில் 69 ரன் விளாசி லாமிகேன் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தவிர, மன்தீப் சிங் மட்டும் பொறுப்புடன் ஆடி 30 ரன்  சேர்த்தார். கே.எல்.ராகுல் 12, அகர்வால் 2, மில்லர் 7 ரன்னில் வெளியேறினர்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. ஹர்பிரீத் பிரார் 20, வில்ஜோன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  அடுத்து களமிறங்கிய டெல்லி அணி தவான், கேப்டன் ஷிரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை துரத்தி எட்டியது. தவான் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிரேயாஸ் 58 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: