சென்னை: நகைக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் ஹேமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் கமல் (36), மீஞ்சூர் பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு தெரியவந்தது.இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.