மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, கர்நாடகா மாநிலம் துமகூருவில் நேற்று அளித்த பேட்டி: எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நாடு மற்றும் மாநில மக்களுக்கு சேவை செய்வேன். எக்காரணத்தை முன்னிட்டும் முழுநேர அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியது உண்மைதான். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தால் இம்முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எனவே, மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியுடன் தோளோடு தோள்கொடுத்து பணியாற்றுவேன்.