பொன்பரப்பி கலவரம் ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி: கமல் கவலை

சென்னை: ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி என்று, பொன்பரப்பி சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேற்று, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி என்ற தனது பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.அவர் கூறுகையில், எனது மருதநாயகம் படத்திற்காக என் மூத்த அண்ணன் இளையராஜாவும், நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் பொன்பரப்பி சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப்போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: