சென்னை: நான்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி (நாளை) தொடங்குகிறது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். மே 19ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.