மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெரு காலனியை சேர்ந்தவர் இளங்கோவன் (60). இவர் அந்த காலனிக்கு நாட்டாமையாக இருந்து வருகிறார். இவரது குடும்பத்தாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கண்ணதாசன், அவரது சகோதரர் சேட்டு என்கிற முருகையன் ஆகியோரது குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்தது. இதில் இருதரப்பிலும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கண்ணதாசன் குடும்பத்தார் திட்டமிட்டு அடியாட்களை வரவழைத்துள்ளனர். இதை அறியாமல் இரவு 9 மணிக்கு கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த இளங்கோவன் மகன் இளவரசன் (35), அவரது உறவினர் தங்கமணி(32) ஆகியோரை 20க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வெட்டித்தள்ளியது.