கரூர்: கரூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தளவாபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பாதுகாப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வழக்கமாக 3 மற்றும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் மக்களவை தொகுதியில் ஆரம்பம் முதலே, தேர்தல் அதிகாரியும், போலீஸ் உயரதிகாரிகளும் ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு பணிந்து போகிற சூழல் நிலவியது. மாவட்ட கலெக்டருக்கும், எனக்கும் நடந்த செல்போன் உரையாடலை தமிழகம் முழுதும் கேட்டுள்ளனர்.