டெல்லி: திகார் சிறை கைதி ஒருவரின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள, நபீர் என்ற முஸ்லிம் கைதியின், முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.