லண்டன்: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. லண்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் மல்லையா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கடன் தொகையை அடைக்க முன்வந்தும் வங்கிகள் ஏற்கவில்லை. என்னை பற்றி செய்தி வெளியிடுபவர்கள், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம், எனது வழக்கு செலவுக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள் என ஆர்டிஐயில் கேட்கவேண்டும். வழக்கிற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.