கேப் நோ: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட எப்சி பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் நடந்த முதல் கட்ட கால் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று பார்சிலோனா அணி முன்னிலை வகிக்க, இரண்டாம் கட்ட கால் இறுதி ஆட்டம் கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்திலேயே நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 16வது மற்றும் 20வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த, பார்சிலோனா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோடின்யோ (61வது நிமிடம்) அபாரமாக கோல் போட்டார். பதில் கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.