சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று மாலை 5 மணிக்கு முடித்தன. இதற்கிடையே தென் சென்னை தொகுதிக்கான சைதாப்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் சைதாப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் சைதாப்பேட்டை பகுதியில் ஒன்று கூடினர்.