பெட்ரோல், டீசல் விலை உயர்வு...... வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.68 ஆக விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து ரூ. 69.96 ஆக விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.68 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: