×

புரோ கபடி சீசன் 7 ஏப்ரலில் வீரர்கள் ஏலம்

புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஏப்ரல் 8,9 தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 2 முதல் 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் 2 பேர் இளம் வீரர்களாக இருக்கவேண்டும்.  பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி,  குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், உ.பி. யோதா ஆகியவை தலா 2 வீரர்களையும்,  தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், யு மும்பா தலா 3 வீரர்களையும், பாட்னா பைரேட்ஸ்,  தெலுங்கு டைட்டன்ஸ் தலா 4 வீரர்களையும் தக்க வைத்துள்ளன. புனேரி பல்தான் எந்த வீரரையும் தக்க வைக்கவில்லை. கடந்த சீசனில் 26 பேர் தக்கவைக்கப்பட நிலையில், இம்முறை  29 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழ் தலைவாஸ் உட்பட எந்த அணியிலும் ஒரு தமிழக வீரர் கூட நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pro Kabaddi Season , players
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்