ஐஎஸ்எல் கால்பந்துதொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணி இப்போது வெளிநாட்டு க கிளப்களுடன் விளையாடி வருகிறது. சமீபத்தில் இலங்கையின் கொழும்பு எப்சியுடன் 2 போட்டிகளில் ஆடியது. இந்நிலையில் ஏஎப்சி கோப்பை-2019 முன்னோட்ட போட்டியில் மீண்டும் வெளிநாட்டு கிளப்களுடன் களம் காண உள்ளது. அதன்படி ஏப்.3, ஜூன்19 தேதிகளில் மினர்வா பஞ்சாப்(இந்தியா), ஏப்.17, ஜூன் 26 தேதிகளில் மானங் மார்ஷியாங்டி(நேபாளம்), ஏப்.30, மே 15 தேதிகளில் அபஹானி லிட் டாக்கா(வங்காளதேசம்), சென்னையில் தாமதமாக கிடைத்த அனுமதி காரணமாக முதல் 3 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. மீதி 3 போட்டிகள் டாக்கா, புவனேஸ்வரம், காத்மாண்டு ஆகிய நகரங்களில் நடக்கும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி