×

செங்குன்றம் அருகே பரிதாபம் பைக் மீது லாரி மோதி இருவர் பலி: 2 பேர் படுகாயம்

புழல்: செங்குன்றம் அருகே பைக் மீது லாரி மோதியதில் இருவர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். சோழவரம் அடுத்த பஞ்செட்டி, சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (50). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மகன் சுஜித் (22). இவர்கள் இருவரும் சென்னை கொளத்தூரில் ஒருவரை பார்ப்பதற்காக, நேற்று  காலை வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டனர். செங்குன்றம் பைபாஸ் சாலை   - சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு சிக்னல் அருகே சென்றபோது, பின்னால் ஜல்லிகற்கள் ஏற்றிவந்த டாரஸ் லாரி, இவர்களின் பைக் மீது மோதியது.

மேலும், இவர்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற ஆவடி அடுத்த கொள்ளுமேடு சாந்தி நகர் பிரதான தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சந்திரபாபு (52), மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம், இடையம் சாவடியை சேர்ந்த  அருணகிரி (40) ஆகியோர் மீதும் மோதியது. இதில், ஜான்சன், சந்திரபாபு ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜான்சனின் மகன் சுஜித் மற்றும் அருணகிரி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, இறந்த இருவரின் சடலங்களை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry , Larry kills 2 ,pistol
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...