×

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னை: ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, என்று தயாநிதி மாறன் குற்றம்சாட்டி உள்ளார்.வடசென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் புளியந்தோப்பு படாளம் பகுதியில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு  எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. திமுக வெற்றியை தடுக்கும் விதமாக செயல்படுகிறது. நமது வெற்றி பிரகாசமாக உள்ளது. மோடி அரசு, பண மதிப்பிழப்பு செய்த பிறகு பணத்தை  மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் வங்கி வாசலில் காத்துக் கிடந்தோம். காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வால் தினசரி கஷ்டப்பட்டு வருகிறோம்.

இதற்கெல்லாம் முடிவுகட்ட அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கும் தேர்தல் அச்சாரமாகும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எடப்பாடி, மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும் வாக்காக இருக்க வேண்டும். தேர்தலின்போது பள்ளிகள்,  அரசு விடுமுறை வரும் காரணத்தால், சொந்த ஊரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் தவறாமல் சென்று வாக்கு செலுத்துங்கள். அப்போதுதான் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட முடியும். இவ்வாறு  தயாநிதி மாறன் பேசினார்.கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,party ,Dayanidhi Maran , Election Commission,ruling party, Dayanidhi Maran'
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...