×

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண் ஐகோர்ட் கிளையில் குழந்தையுடன் ஆஜர்

மதுரை: மதுரை, அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மக்களின் நலன்  கருதி, தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.கந்தர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக்குழுவினருடன்  பாதிக்கப்பட்ட பெண், குழந்தையுடன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். எச்ஐவி சிகிச்சைத்துறை தலைமை டாக்டர் ஆஜராகி விளக்கம்  அளித்தார்.  இதனையடுத்து, அந்த பெண்ணிடம் நீதிபதிகள் தனி அறையில் சுமார் ஒரு மணிநேரம், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்  குறித்து கேட்டறிந்தனர்.  பின்னர், வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : baby girl ,lady ,hike , HIV blood, woman, horticulture, child
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...