×

செங்கம் அருகே நேற்றிரவு பதற்றம்; தாயின் மடியில் இருந்த 9 மாத குழந்தை பஸ் ஜன்னல் வழியாக தவறி விழுந்தது.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செங்கம்: அரசு பஸ்சில் தாயின் மடியில் இருந்த 9 மாத கைக்குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்தது. குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா(30). இவரது கணவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சத்தியபிரியா (9 மாதம்) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் சரண்யா நேற்று பெங்களூரில் உள்ள கணவரை பார்ப்பதற்காக திருக்கோவிலூரில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ்சில் குழந்தை சத்தியபிரியாவுடன் சென்றார். ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து பயணம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9.30 மணியளவில் பஸ் வந்தது. அப்போது சாலையில் விபத்துக்களை தடுக்க இருபுறமும் மாறி மாறி அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை பஸ் வளைந்து வளைந்து கடந்து சென்றது.

அப்போது சரண்யாவின் மடியிலிருந்த குழந்தை தவறி ஜன்னல் வழியாக ெவளியில் விழுந்தது. இதனால் அதிரச்சியடைந்த சரண்யா அலறி கூச்சலிட்டார். இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கீழே இறங்கி குழந்தை சத்தியபிரியாவை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் தாய் மற்றும் பயணிகள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வரும் அரசு பஸ்களில் ஜன்னல் கம்பிகள் அதிக இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பெரியவர்கள் கூட விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பாக மக்கள் பயணம் செய்யும் வகையில் ஜன்னல் கம்பிகளை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengam ,hospital , Chenam, mother's lid, baby, bus window, fell
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...