×

துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி சாவு : உறவினரிடம் இன்று உடல் ஒப்படைப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம், கருக்கல் நாடார் பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29), இவர் 2013ம் ஆண்டு ஆயுதப்படை போலீஸ்காரராக பணியில் சேர்ந்து, சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர், கடந்த 20ம் தேதி தான் வைத்திருந்த எஸ்எல்ஆர் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்து சுட்டுக்கொண்டார்.

துப்பாக்கி குண்டு மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு பின்பக்கமாக வெளியேறியது. இதில் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த மற்றொரு போலீஸ்காரர் மற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த வந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Firearms personnel,shot, firearms ,death
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...