சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 20 பேர் காயம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்துக்கு, தலா 250 கொடுத்து லத்தேரி அடுத்த விழுந்தகால் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை லோடு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர். டிரைவர் அருள்(34) ஓட்டிவந்தார். விக்கிரமாசிமேடு பஸ் நிறுத்தம் அருகே லோடு ஆட்டோ டயர் பஞ்சராகி கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் இல்லாததால் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேரணாம்பட்டில் எடப்பாடி பிரசாரத்துக்காக சவுக்கு மரத்தில் ஸ்பீக்கர் கட்டி மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. மாலை 5.20 மணியளவில் ஒரு சவுக்கு மரத்தை யாரோ பிடித்ததில் மின்சாரம் தாக்கி சில பெண்கள் நிலை தடுமாறி விழுந்தனர். மற்ற பெண்கள் அலறியடித்து ஓடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: