×

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிட்ட உள்துறை செயலாளர், கோவை எஸ்பி மீது வழக்கு பதியக்கோரி மனு தாக்கல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீதும், அரசாணையை வெளியிட்ட தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.

அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் எஸ்பி மீதும், உள்துறை செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
எனவே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீதும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். எனவே, இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Home Secretary ,SP ,Coimbatore ,Pollachi , Home secretary, filed a case , SSP Coimbatore
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...