மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : தமிழர் தேசிய கொற்றம் முடிவு

சென்னை: தமிழ்நாட்டை டெல்லிக்கு கொத்தடிமை நாடாக்கும் அதிமுகவிடம் சிக்கி சீரழிந்து வரும் தமிழ்நாட்டைகாக்க மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற திமுக கூட்டணிக்கு தமிழர் தேசிய கொற்றம் ஆதரவு அளிக்கும் என்று தமிழர் தேசிய கொற்றம் தலைவர் வியனரசு கூறினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வியனரசு மற்றும் புதிய தமிழகம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பொறுப்பாளர்களும் இணைந்து தொடங்கிய தமிழர் தேசிய கொற்றம் கட்சியின் மக்களவைத் தேர்தல்  நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தலைவர் வியனரசு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு காலமாக இந்தியாவை மதவெறி காடாக்கும் பாசிச பாஜகவின் பிடியிலிருந்து மீட்கவும், அவர்களோடு கூட்டுச் சேர்ந்து தமிழ் நாட்டைத் டெல்லிக்கு கொத்தடிமை நாடாக்கும் அதிமுகவிடம் சிக்கி சீரழித்து வரும் தமிழ் நாட்டைக்காக்கவும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க தமிழர் தேசிய கொற்றம் முடிவு செய்துள்ளது. தமிழர் தேசிய கொற்றத்தின் கொள்கைகளில் முதன்மையானது தமிழ்த் தேசியமே என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் திரைப்பட நடிகர்களின் பெரும் முதலாளிகளின் கைப்பாவைகளான நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த் போன்றவர்களின் மாயவலையில் தமிழக அரசியல்  சிக்கிக் ெகாள்ளக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதன் அடிப்படையில் தமிழனாக இருந்தாலும் தமிழ்த்தேசியம் பேசினாலும் திரைக்கலை இயக்குநர் சீமானின் ஏமாற்று அரசியல் அனுபவத்திலும் இனி எந்தக்காலத்திலும் திரைப்பட நடிகர்களின் அரசியல் பித்தலாட்டங்களில் சிக்கிவிடாமல் தமிழர்களைப் பாதுகாக்கும் முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. எனவே, அதிமுக அரசை தூக்கி எறியவும் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு வியனரசு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: