விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திறமையான பிரதமர், வலிமையான இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடி மீண்டும் பிரதமர் என்ற முழக்கத்தோடு எங்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. தீவிரவாதிகளின் அச்சறுத்தலை இரும்புகரம் கொண்டு அடங்கி நிரூபித்து காட்டியவர் மோடி.ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று துரோகத்தின் விளைவாக, தவறான வழியில் சென்றதால் தகுதி நீக்கப்பட்டு பதவி இழந்துள்ளனர்.