×

மார்க்கண்டேயன் விரைவில் எங்களுடன் இணைவார் தேர்தல் முடிந்ததும் ஈசல் போன்ற கட்சிகள் முடிவுக்கு வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பொதுமக்களிடம் ஆதரவு  திரட்டி பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திறமையான பிரதமர், வலிமையான இந்தியாவை உருவாக்க  நினைக்கும் மோடி மீண்டும் பிரதமர் என்ற முழக்கத்தோடு எங்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. தீவிரவாதிகளின் அச்சறுத்தலை இரும்புகரம்  கொண்டு அடங்கி நிரூபித்து காட்டியவர் மோடி.ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று துரோகத்தின் விளைவாக, தவறான வழியில்  சென்றதால் தகுதி நீக்கப்பட்டு பதவி இழந்துள்ளனர்.

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் ஜெயலலிதாவின் இரு உருவங்களாக தொண்டர்கள் பார்க்கின்றனர். தலைமை அறிவித்த வேட்பாளர்களை வெற்றி  பெற வைப்போம். மழைக்காலங்களில் தோன்றும் ஈசல் போன்று பல கட்சிகள் போட்டியிட்டலும், அந்த கட்சிகள் தேர்தலுக்கு பின்பு முடிவுக்கு  வந்துவிடும். முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்த நிமிடம் வரை முன்னாள் எம்எல்ஏ  மார்க்கண்டேயனை எங்கள் சகோதரராக நினைக்கிறோம். விரைவில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவர் என்று நம்புகிறோம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Markandeyan ,Kadambur Raju ,parties ,polls ,Isal , Markandeya, Minister Kadambur Raju
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...