×

நிலைமை சரியில்லை ஆட்சி பிழைக்க மோடி வரணும்: சண்முகநாதன் எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது: இதுவரை நாம்  மறைந்த நமது முதல்வர்  ஜெயலலிதா தலைமையில் தான் அனைத்து தேர்தல்களையும் சந்தித்து சாதித்து வந்தோம். ஆனால்  இப்போது கட்சி  நிலைமை அப்படி இல்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எத்தனையோ  இக்கட்டான சூழல்கள் வந்தபோதும் அவற்றை எல்லாம் திறம்பட  சமாளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.  மக்களுக்கான  அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாம் முழு மெஜாரிட்டியுடன் இல்லாத தற்போதுள்ள  சூழலில் நாம் நாடாளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி  பெற்றே ஆகவேண்டும்  என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். மத்தியில் மோடி ஆட்சியில் இருந்தால்  தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி  இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பணியாற்றுங்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,talks ,Shanmuganathan MLA , Modi , Shanmuganathan MLA talks
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...