18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் இல்லை அதிமுகவுடன் தினகரன் மறைமுக கூட்டணி? அதிர்ச்சியில் தொண்டர்கள்

பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த காரணத்தால், அமமுக துணைபொது செயலாளர் டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்எல்ஏ  பதவி பறிக்கப்பட்டதால் தான் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் தினகரனும்,  செயல்பட்டு வந்தார். ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போது, ஆட்சியை அதிமுக தக்க வைக்க  தினகரன் மறைமுக ஆதரவு தருவதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.  

காரணம், தகுதி நீக்க எம்எல்ஏக்களான ஆண்டிப்பட்டி தங்க. தமிழ்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சோளிங்கர் பார்த்திபன் ஆகிய 3 பேருக்கும்  மீண்டும் அவர்களது தொகுதிகளிலேயே வாய்ப்பு வழங்கப்படாமல், எம்பி தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு அவர்களையே நிறுத்தி  வெற்றி பெற வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க நினைக்காமல், ஏன் இவர்களை தினகரன் எம்பி தேர்தலில் நிறுத்தி உள்ளார் என்ற கேள்வி  அனைவரது மனதிலும் பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சர்கள் கூறியதாவது: தங்க தமிழ்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன்  ஆகியோர் தங்களது தொகுதிகளில் கணிசமான வாக்குகளை குறிப்பாக 2வது இடத்துக்காவது வருவார்கள் என்று கணிக்கப்பட்டது.

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று உண்மையிலேயே தினகரன் நினைத்திருந்தால், இவர்களுக்கு மீண்டும் ஆண்டிப்பட்டியிலும்,  பாப்பிரெட்டிப்பட்டியிலும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். தினகரன் அவ்வாறு செய்யாதது தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க பாஜ மேலிடம் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது.  இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று மதுரை  ஆதீனம் நேற்றுமுன்தினம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை உடனடியாக தினகரன் மறுத்தாலும், அவரது வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போது  ஆதீனத்தின் பேச்சு உண்மையாக இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

எனவே தான் தினகரன் 18 தொகுதி இடைத்தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்  குமாரை வீழ்த்தவே, தங்க தமிழ் செல்வனை களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, பாமக கடைசி வரை தங்களிடம் வருவதாக  கூறிவிட்டு, கடைசியில், தங்களால் தேர்தல் செலவுக்கு பணம் தர முடியாது என்று கூறியதால், அதிமுக பக்கம் சாய்ந்த பாமகவுக்கு பதிலடி கொடுக்க  தர்மபுரியில் பழனியப்பனை களம் இறக்கியதாக கூறப்படுகிறது. தினகரனின் ரகசிய திட்டத்தால், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: