சோளிங்கர்: சோளிங்கரில் உள்ள ஜோதிமோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சோளிங்கர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிமோட்டூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவில்லையாம். பின்னர், இதுகுறித்து அப்பகுதிமக்கள் ஊராட்சி செயலர் மற்றும் காவேரிப்பாக்க்ம் பிடிஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதிமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வந்தனர்.