×

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் கோவை எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் கோவை எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை எஸ்.பி. செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது.

அதே போல தமிழக அரசு இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையிலும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குறிப்பிடப்பட்டிருந்ததாக மற்றொரு குற்றசாட்டு எழுந்தது. இப்படியான சூழ்நிலையில் உள்துறை செயலாளர் கோவை எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்யக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு திங்கட்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Sexual Horror ,Coimbatore SB ,High Court , Pollachi, Sexual, Coimbatore, SP, Case, High Court, petition
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...