×

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை துவக்கம்; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு மோதல்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், நாளை (23ம் தேதி) சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் 8 அணிகள் களமிறங்க உள்ளன. இவை தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் சுற்று போட்டி அட்டவணை கடந்த 20ம் தேதி வெளியானது. லீக் சுற்று போட்டிகள் நாளை முதல் மே 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன. பிளே ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான போட்டி அட்டவணை பின்னர் வெளியாகும்.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோத உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான தொடக்க விழா மற்றும் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு செலவிட இருந்த தொகை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்க உள்ளது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 16ம் தேதி நடந்தது. விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘இந்த தொகைக்கான காசோலையை இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட்டாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் டோனி வழங்குவார்’ என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,match ,conflict ,Bengaluru ,Chennai , The teams. 2019, Chennai, Bengaluru, Virat Kohli, MS Dhoni,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...