×

பந்தலுார் அருகே சாலை பணிகளை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்

பந்தலூர்: பந்தலூர் அருகே உள்ள மானூர் பகுதியில்  தார்சாலை  அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மானூர் பகுதியில் ஏராளமானோர்  வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் 1.7 மீ., தூரம் தார் சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த சாலையை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.  அப்போது சாலைப்பணி நடைபெற்றும் இடம் வனத்துறை கட்டுப்பாடில் உள்ளதாக கூறி சேரம்பாடி வனத்துறையினர் பணிகளை தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் திமுக எம்எல்ஏ., திராவிடமணி சாலைப்பணிகளை தடுக்க கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதுபற்றி அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்ததால் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest department ,Pandalar , Pandular, road,forest department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...