×

3% அகவிலைப் படியை பணமாக வழங்க அரசு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய அகவிலைப்படி கடந்த ஜனவரி மாதம் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப் படி, 2019 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 27ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து நிலுவைத் தொகை வழங்கவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசும், அரசு ஊழியர்களுக்கு கடந்த 1.1.2019ம் தேதி முதல் கணக்கிட்டு, உயர்த்தப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அதை ரொக்கமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government employees , Government employees
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்