×

நடிகை வடிவுகரசி வீட்டில் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: நடிகை வடிவுகரசி வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல திரைப்பட நடிகை வடிவுகரசி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் மற்றும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். வடிவுகரசி, சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்புக்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே ெசன்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை வடிவுகரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த பீரோவின் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த மோதிரம், செயின் என 8 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து நடிகை வடிவுகரசி சகோதரர் அறிவழகன்(65) பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actress Fraudster, Theft
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...