சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 8.21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 6ம் தேதி தேர்வுகள் தொடங்கின. 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ- மாணவியர் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் வேலூர், கடலூர், உட்பட பல சிறையில் உள்ள 78 கைதிகள் புழல் சிறையில் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு முதல் மார்ச் மாதம் தேர்தல் நடத்தி, ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தி, மே மாதம் தேர்வு முடிவுகளை அறிவிக்க தேர்வுத்துறை திட்டமிட்டது.