×

வாலிபரை வெட்டி பணம் பறிப்பு

பெரம்பூர்: காசிமேடு பகுதியில் பைக்கில் வந்தவரை 3 மர்ம நபர்கள் மிரட்டி கத்தியால் வெட்டி ரூ.6 ஆயிரம் பணத்தை  பறித்துக்கொண்டு தப்பினர். ராயபுரம், ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த் (29). கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்க்க பைக்கில் காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்றார்.

அங்கு வந்த 3 பேர் திடீரென விஜயகாந்த்தை கத்தியால் இடது கை, புஜம், தொடை பகுதிகளில்  வெட்டி  அவரிடமிருந்து ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த விஜயகாந்த்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து விஜயகாந்த் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : youth, money
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...