×

சேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொலை பாமக நிர்வாகி உட்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 2014 பிப்ரவரி 14ம்தேதி இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். பெருமாள் கோவில் கரடு பகுதியில் நிர்வாண நிலையில் மரத்தில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே சென்றாயம்பாளையம் பகுதி பாமக நிர்வாகி பூபதி, சினேக்பாபு என்ற ஆனந்தபாபு ஆகியோர் வி.ஏ.ஓ. முன் சரண் அடைந்தனர். அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில்,ஆனந்த்(22),பிரபாகரன்(26),அவரது அண்ணன் பாலகிருஷ்ணன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 5 பேரும், கதவு இல்லாத வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி, கரட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்ததில் அச்சிறுமி இறந்துபோனதும், அவரை நிர்வாணப்படுத்தி, தூக்கில் தொங்க விட்டதும் தெரிய வந்தது. இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 19ம் தேதி 5 பேரையும் குற்றவாளிகள் என்றும், தண்டனை 21ம்தேதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். இதையடுத்து நேற்று மாலை 4மணிக்கு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிபதி விஜயகுமாரி தண்டனையை அறிவித்தார். குற்றவாளிகள் பூபதி,சினேக்பாபு என்ற ஆனந்தபாபு, ஆனந்த்,பிரபாகரன்,பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறுமியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும்,போக்சோ பிரிவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் தலா 40ஆயிரம் அபராதமும் விதித்தார். தண்டனையை கேட்டதும் குற்றவாளிகளின் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர். இதுகுறித்து இவ்வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் தனசேகரன் கூறுகையில்,‘‘இந்த வழக்கு மிகவும் கொடூரமானது. இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டேன். தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிகள்அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதுடன்,47 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,murder manager ,Salem , Girl was raped,murdered near Salem
× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு