போலியோ விழிப்புணர்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம்

மதுரை: போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  வருங்காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இம்மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், நடிகர்களில் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பிட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இச்சேவையில் தாமாக முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் நடிகர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறோம் என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: