ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து 71 பேர் பலி

மொசூல்:  ஈராக்கின் குர்திஷ் புத்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று குர்திஷ் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி, நாட்டின் வடபகுதியில் உள்ள மொசூல் நகரில் ஓடும் திக்ரிஸ் ஆற்றில், மிதவை கப்பலில் ஏராளமானவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாரம் தாங்காமல், மிதவை கப்பல் திடீரென கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகில் இருந்தவர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 71 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பேர் குழந்தைகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: