வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் வெடிப் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 326 ஜெலீட்டின் குச்சிகள் மற்றும் 522 டேட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தில் வட்டாட்சியர் பாஸ்கர் தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொடியலாம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது டிராக்டரில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 125 டேட்டனேட்டர்கள் மற்றும் 109 ஜெலீட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சேகர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளியல் அறையில் 399 டேட்டனேட்டர்கள் மற்றும் 217 ஜெலீட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்த் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: