மதுரை: தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் என்ன எனவும், முடிக்கப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40,000 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தாமிரபரணியில் இருந்து 13 டிஎம்சி நீரி வீணாக கடலில் கலப்பதால் மூன்று ஆறுகளை இணைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.