பல ஆண்டாக போலீசுக்கு டிமிக்கி குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு

அண்ணாநகர்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு பல ஆண்டாக தலைமறைவாக உள்ள குற்றவாளி குறித்து தகவல் கொடுக்க போலீசார் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் மண்ணடி பார்க் லேன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (38). பிரபல ரவுடி. டிபி.சத்திரம், அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்டார். அவரை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.

இதையொட்டி ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், கடந்த 6 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் காவல் துறையின் சார்பில் சீனிவாசனின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே அவரை பற்றி பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை அல்லது சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: