பெரம்பூர்: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்குரிய நபரின் பைக்கை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த பிரகாஷ் (34) என்பதும், 10 ஆயிரம் மதிப்பில் குட்கா கடத்தியதும் தெரிந்தது. எனவே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பிரகாஷை பிடித்து விசாரிக்கின்றனர்.