தாம்பரம்: தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி, அகரம், தென்பிரதான சாலையை சேர்ந்தவர் குணசேகரன் (54). விவசாய நிலம் மற்றும் மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) என்ற இளம்பெண் தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை தாம்பரம் பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர், குணசேகரனிடம் வந்து குடும்ப பிரச்னையை எடுத்து கூறி ஏதாவது வேலை வழங்குமாறு கேட்டதாகவும், அதற்கு குணசேகரன் தனது விவசாய நிலம், மாடுகளை பராமரிக்கும் பணியை தேவிக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தேவியின் கணவர், தாம்பரத்துக்கு வந்து ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தேவி, மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அங்கேயே தங்கி வேலை செய்வதாக கூறியதால் குணசேகரன் அனுமதி தந்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.