‘சாப்’ கோப்பை மகளிர் கால்பந்து தொடர்ந்து 5வது முறையாக பைனலுக்கு முன்னேறியது இந்தியா

பிராத்நகர்: தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ‘சாப்’ கோப்பை மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட, தொடர்ந்து 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேபாளத்தின் பிராத்நகர், சாகித் ரங்கஷலா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த அரை இறுதியில் வங்கதேச அணியுடன் மோதிய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. இந்திய வீராங்கனைகள் இந்துமதி கதிரேசன் 2, தலிமா சிப்பர், மணிஷா தலா 1 கோல் போட்டனர். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - நேபாளம் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: